சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Brydon Carse

பிரைடான் கார்ஸ் - படம் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)

Published On :14 ஏப்ரல் 2026, 8:39 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரைடான் கார்ஸ் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

காயம் காரணமாக விலகியுள்ள பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரராக இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் ரூ. 75 லட்சத்துக்கு இணைந்துள்ளார். இதற்கு முன்பாக, மதுஷங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் அடுத்தப் போட்டியில் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.

Summary

A replacement player has been added to the Sunrisers Hyderabad squad in place of fast bowler Brydon Carse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.