சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்தினால் வெளியேறியதால் அவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை அணியில் எடுத்து ஆச்சரியமளித்துள்ளது.
வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் சிஎஸ்கே அணியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆயுஷ் மாத்ரே காயம் கண்ட நிலையில், அதிலிருந்து அவா் மீள்வதற்கு 6 முதல் 12 வாரங்கள் தேவைப்படலாம் என்பதால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
ஆகாஷ் மத்வால் இதுவரை 17 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2023ல் 5 விக்கெட்டுகள் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணி பேட்டருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க முடிவாக இருக்கிறது.
Summary
Replacement Player Announced for Ayush Mhatre!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயிற்சிதான் காரணம்... ஆட்ட நாயகன் முகமது சிராஜ் பேட்டி!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

வருத்தமாக இருக்கிறது..! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவின் பதிவு!







