வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

மாற்று வீரராக சிஎஸ்கே எடுக்கவிருக்கும் இளம் அதிரடி வீரர் குறித்து...

News image

விருது வென்ற ஆயுஷ் வர்தக். - படம்: இன்ஸ்டா / ஆயுஷ் வர்தக்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:15 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 36 பந்துகளில் சதமடித்த இளம் வீரரான ஆயுஷ் வர்தக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மூன்றில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் அடைந்துள்ளன. இந்த நிலையில், காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்களை எடுக்க திட்டமிட்டு வருகிறது.

முன்னதாக, ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக சிஎஸ்கே அணி ஆகாஷ் மத்வாலை எடுத்தது. தற்போது, கலீல் அகமதுக்குப் பதிலாக அதிரடியான ஆல்ரவுண்டரை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 21 வயதான ஆயுஷ் வர்தக் யு23 மும்பை கேப்டனாக சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆடவர் மாநில ஏ கோப்பையில் 6 இன்னிங்ஸில் 363 ரன்கள் குவித்தார். இதில் 26 சிக்ஸர்கள் அடங்கும். சிகே நாயுடு கோப்பை 2024-25 சீசனில் 192 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 3 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்து கவனம் ஈர்த்தார்.

நவி மும்பை டி20 லீக்கில் 264 ரன்களை 191.30 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக சிறந்த யு-23 வீரர் என்ற விருதையும் பெற்றார்.இது குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் கூறியிருப்பதாவது:

ஆமாம், ஆயுஷ் வர்தக் திங்கள் கிழமை இரவு சென்னை வந்தார். செவ்வாய்க்கிழமை ட்ரையல்ஸுக்காக அழைக்கப்பட்டுள்ளார். வருங்காலத்துக்கான நல்ல அணியை உருவாக்கும் முனைப்பில் சிஎஸ்கே செயல்பட்டு வருகிறது.

அதிரடி பேட்டரான இவர் ஒரு போட்டியில் காலில் அடிப்பட்டி ரத்தம் சொட்ட சொட்ட விளையாடியுள்ளார். போட்டிக்குப் பிறகு 5 தையல் போடப்பட்டுள்ளது. அதிரடி மட்டுமில்லாமல் மன உறுதிக்கும் பெயர்போன இவரை சிஎஸ்கே அணி விரைவில் அணியில் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

A Century in 36 Balls; CSK Sets Sights on Youngster Who Played While Bleeding! Who is This Ayush Vartak?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.