
ரிஷப் பந்த்திடம் எப்போதும் அறிவுரை கேட்பேன்: துருவ் ஜுரெல்
ரிஷப் பந்த்திடம் எப்போதும் அறிவுரை கேட்பேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

படம் | பிசிசிஐ
ரிஷப் பந்த்திடம் எப்போதும் அறிவுரை கேட்பேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜுரெல் 115* ரன்கள், ரிஷப் பந்த் 63 ரன்கள், கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தனர்.
துருவ் ஜுரெல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 112 ரன்கள் சேர்த்தனர்.
இந்த நிலையில், ரிஷப் பந்த்துடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து துருவ் ஜுரெல் பேசியுள்ளார்.
இது தொடர்பாக இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் மிகவும் அபாயகரமான வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் அணியில் இருக்கும்போது, அவரிடம் மட்டுமே அறிவுரைகளை கேட்பேன். ஏனெனில், அவரிடம் நிறைய அனுபவம் இருக்கிறது.
ரிஷப் பந்த்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது மிகவும் சிறப்பான உணர்வைத் தந்தது. அவரைப் போன்று என்னால் விளையாட முடியாது. என்னுடைய ஆட்டம் மாறுபட்டதாக இருக்கும். நானும் ரிஷப் பந்த்தும் விக்கெட் கீப்பர்கள் என்பதாலும், இருவரும் மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் என்பதாலும் அவரிடம் எப்போதும் அறிவுரைகளைக் கேட்பேன் என்றார்.
Summary
Dhruv Jurel, one of the young players of the Indian team, has stated that he will always seek advice from Rishabh Pant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







