

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சைம் ஆயுப் 56 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஷதாப் கான் 46 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ குன்னமேன், மேத்யூ ஷார்ட், கூப்பர் கன்னோலி மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அபார வெற்றி
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 22 ரன்களும், ஜோஷ் பிலிப் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது நவாஸ் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷாகின் அஃப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது மற்றும் நஷீம் ஷா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.