பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கிரிக்கெட் வீரர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு விரைவில் திருமணம்!

கிரிக்கெட் வீரர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு விரைவில் திருமணம்...

கிரிக்கெட் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் (கோப்புப் படம்) - Mumbai Indians

Published On :

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் மகள் சானியா சாந்தோக் என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ நிபுணராகப் பணிப்புரிந்து வரும் சானியாவுடன் அர்ஜுனுக்கு, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும், இருவரின் திருமண நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 3 ஆம் தேதி தொடங்குவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மும்பையில் நடைபெறவுள்ள அர்ஜுன் மற்றும் சானியா திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு லக்னௌ அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Information has emerged that Arjun Tendulkar, is set to get married in March.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.