பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

யு19 உலகக் கோப்பை: இரட்டைச் சதத்தை தவறவிட்ட இங்கி. வீரர்! ஸ்காட்லாந்துக்கு 405 ரன்கள் இலக்கு!

யு19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி குறித்து...

News image

இங்கிலாந்து வீரர் பென் மாயேஸ். - படம்: ஐசிசி

Updated On :21 ஜனவரி 2026, 5:27 pm IST

யு 19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 404/6 ரன்கள் எடுத்துள்ளது.

குரூப் சி பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க நம.3 வீரராக பென் மாயேஸ். களமிறங்கினார்.

இவரும் தொடக்க ஜோசப் மூரிஸும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

அதிகபட்சமாக பென் மாயேஸ் 191 ரன்களும் ஜோசப் மூரிஸ் 81 ரன்களும் எடுத்தார்கள்.

இறுதியில் 50 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தார்கள். குரூப் சி பிரிவில் ஏற்கெனவே இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றதால், ஸ்காட்லாந்து அணிக்கு இந்த வெற்றி முக்கியமானது.

Summary

U19 world cup Ben Mayes missed double century and England set a target of 405 runs for scotland

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.