

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வாகி புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறி இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 166/8 ரன்கள் எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த வெற்றியுடன் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக அதிகபட்சமாக (5) அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்
5 - இங்கிலாந்து (2016-26)*
4 - பாகிஸ்தான் (2007-12)
4 - இலங்கை (2009- 14)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.