
பிபிஎல் இறுதிப் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவாரா புதிய பிரட் லீ?
பிபிஎல் இறுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் - இளம் வீரருக்கான போட்டி குறித்து...

ஸ்டீவ் ஸ்மித், பியர்ட்மேன். - படம்: பிபிஎல்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கார்சிஸ் அணியும் இன்று (ஜன.25) இந்திய நேரப்படி மதியம் 1.45க்கு மோதுகின்றன.
இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீரர் பியர்ட்மேன் வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரட் லீ என ரசிகர்களால் அழைக்கப்படும் மஹ்லி பியட்ர்மேன் (20 வயது) மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
பிபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்த பியட்ர்மேன் பிரட் லீயின் செயின்ஷா கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் குறித்து ஆரோன் பின்ச், “கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் பிடித்ததே வேகமாக ஓடிவந்து பந்துவீசுவது பந்துவீசுவது மட்டுமல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து பந்துவீசுகிறார்.
எப்போது மெதுவான பந்து வீச வேண்டும் என்பதை இள வயதிலேயே அறிந்து வைத்துள்ளார். அவரது ஆர்வம் பிடித்துள்ளது. அவரது பிரட்லீயின் கொண்டாட்டமும் பிடித்திருந்தது” என்றார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளனர்.
இந்தப் போட்டிகளில் 3 முறை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்அணியும் 2 முறை சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் வென்றுள்ளன.
Can Mahli Beardman remove Steve Smith again? Just one of the key battles set to decide this season's finale ð
— KFC Big Bash League (@BBL) January 25, 2026
ð§ Preview the #BBL15 Final with #TheSurge: https://t.co/kV6WYgm2S4. pic.twitter.com/Pp4ngjLISl
Summary
Can Mahli Beardman remove Steve Smith again? aaron finch aploud in BBL Final 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





