FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்: முன்னாள் வீரர்

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கென தனியான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ

Updated On :10 ஜூலை 2026, 9:55 pm IST

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கென தனியான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்தது. அதன் பின், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி இழந்துவிட்டது.

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கென தனியான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயர் தன்னை ஒரு கேப்டனாக நிரூபித்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளார். ஐபிஎல் தொடரில் அவரிடம் பார்த்த கேப்டன்சியை தற்போது பார்க்க முடியவில்லை. கேப்டனாக ஆடுகளத்தில் நின்று விளையாடும்போது, உங்களது பார்ட்னருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை மிகவும் முக்கியம்.

சர்வதேசப் போட்டிகளில் அவர் கேப்டனாக உருவெடுக்க நேரம் தேவைப்படும். அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கிறார். அவரது ஃபார்ம் கேப்டனாக நன்றாக செயல்பட உதவியாக இருக்கும். கேப்டனாக அவருக்கென தனியான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய இடத்தில் ஷ்ரேயாஸ் உள்ளார் என்றார்.

Summary

A former Indian team player has stated that Shreyas Iyer needs to carve out a distinct identity for himself as a captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.