ஆப்கானிஸ்தான் அணியினர் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுலின் விக்கெட்டை ரிவிவ் எடுக்க தவறியதால், அவர் அரைசதத்தை கடந்து விளையாடிவருகிறார்.
முல்லான்பூரில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் 10.1ஆவது ஓவரில் ஜியாவுர் ரஹ்மான் ஷரீஃபி வீசிய பந்தில் கே.எல். ராகுலின் பேட்டின் முனையில் பந்து பட்டு கீப்பரால் பிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் விக்கெட்டுக்கு கோரிக்கை விடுத்த ஆப்கானிஸ்தான் அணியினர் நடுவர் விக்கெட் கொடுக்காததால் அமைதியாகிவிட்டனர்.
பின்னர் ரீப்ளேவில் அந்தக் காட்சிகள் வெளியானபோது, பந்து பேட்டில் பட்டது அல்ட்ராஎட்ஜில் உறுதியானது. அப்போது 16 ரன்களில் இருந்த கே.எல். ராகுல் தற்போது அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 31 ஓவர்கள் முடிவில் 121/1 ரன்கள் குவித்துள்ளது. கே.எல். ராகுல் 52, சாய் சுதர்சன் 42 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
பிசிசிஐ ஏமாற்றிவிட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் இதனை விமர்சித்து வருகிறார்கள். நடுவர்கள் சில நேரங்களில் இது மாதிரியான தீர்ப்புகளை வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ரிவிவ் நடைமுறை கொண்டுவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Summary
KL Rahul edged it, but the visitors chose not to review and let a crucial chance slip away
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









