தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: கேமரூன் கிரீன்

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடினமான சூழலில் இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

News image

கேமரூன் கிரீன் - படம் | AP

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடினமான சூழலில் இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அனைத்து அணிகளும் முனைப்பு காட்டி சிறப்பாக விளையாடி வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 6 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடினமான சூழலில் இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒருபோதும் நம்பிக்கையை இழந்ததாக நினைக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் எங்களிடம் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்ப நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த தொடர் முழுவதும் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். தில்லி கேபிடல்ஸுக்கு நேற்றையப் போட்டியிலும் அவர்கள் அபாரமாக செயல்பட்டனர். என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அடுத்தப் போட்டியில் வருகிற மே 13 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Cameron Green has stated that the Kolkata Knight Riders never lost hope, even while facing a series of defeats and navigating through a difficult situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.