திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

கார்த்திக் சர்மா மற்றும் டெவால்ட் பிரேவிஸ் - படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :38 நிமிடங்கள் முன்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (மே 15) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

லக்னௌவுக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு குறைந்துள்ளது. சிஎஸ்கே அடுத்து விளையாடக் கூடிய கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், கடைசி இரண்டு லீக் போட்டிகளையும் இறுதிப்போட்டியாக நினைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட வேண்டும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடர் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்று இருக்கப் போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸும் அதே சூழலில்தான் இருக்கிறது. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். மேலும், மற்ற அணிகளின் முடிவுகளையும் நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

எங்களது கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். புள்ளிப்பட்டியலை நான் அதிகம் பார்க்கவில்லை. டாப் 4-ல் கடைசி இரண்டு இடங்களைப் பிடிக்க நிறைய அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி பெற்றாக வேண்டும் என்ற அழுத்தம் சிஎஸ்கே மீது மட்டுமின்றி, அனைத்து அணிகளின் மீதும் இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இன்னும் இருக்கிறது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, கடைசி இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Summary

The coach of the Chennai Super Kings has stated that the team still has a chance to advance to the playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.