ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியடைந்ததால் நடப்பு சீசனிலிருந்து வெளியேறியது.
நியூ சண்டீகரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் புதன்கிழமை(மே 27) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.
அடுத்து, இமாலய இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய முக்கியமான ஆட்டத்தில், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து, ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை வெள்ளிக்கிழமை(மே 29) நியூ சண்டீகரில் நடைபெற உள்ள இறுதி ஆட்டத்துக்கு முந்தைய முக்கியமான ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
Summary
Rajasthan Royals won by 47 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










