கேரளாவில் காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஞாயிற்றுக்கிழமை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து 2018 நடைபெற்று வரும் இந்த நேரத்தில், அதுவும் மெஸ்ஸியின் பிறந்த தினத்தில் இக்கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து திகழ்கிறது. அங்கு பிரேசில், ஆர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகளின் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
ஜூன் 21-ஆம் தேதி ஆர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் குரோஷியா, பலம் வாய்ந்த ஆர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் வசிக்கும் டினு ஜோஸப் என்ற 30 வயது ஆர்ஜென்டினா ரசிகர் ஜூன் 22-ஆம் தேதி முதல் காணாமல் போனார். மேலும், இனி இந்த கால்பந்து உலகக் கோப்பையில் நான் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன், இதற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், 2 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பின்னர் டினு ஜோஸப்-இன் உடல் கோட்டயத்தில் உள்ள இல்லிக்கல் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


