சிஎஸ்கே சார்பில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நிதியுதவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. 
சிஎஸ்கே சார்பில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நிதியுதவி
Published on
Updated on
1 min read

2019-ஆம் ஆண்டு நடைபெறும் 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. 

மேலும் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத் தொகை ரூ.20 கோடியும் சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஆர்பிஎப் அதிகாரிகளிடம்  வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com