சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவர்பிளேயில் சொதப்புகிறோம்: சிஎஸ்கே பயிற்சியாளர் வேதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் இந்தமுறை மிகவும் ஏமாற்றுகிறது. தோனியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை...

News image
Updated On :8 மே 2019, 9:01 am

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் இந்தமுறை மிகவும் ஏமாற்றுகிறது. தோனியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை. அதிலும் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) அதிக விக்கெட்டுகளை இழப்பதால், பின்னால் வரும் வீரர்களுக்குப் பெரும் சுமையாகிவிடுகிறது. 

இதுவரை விளையாடிய 15 ஆட்டங்களில் பவர்பிளே பகுதியில் மட்டும் 29 விக்கெட்டுகளை இழந்துள்ளது சிஎஸ்கே. ஆனால் இதற்கு நேர்மாறாக சன்ரைசர்ஸ் அணி, 14 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!

இதுபோல சென்னை அணி பவர்பிளே பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்து அதிக ரன்களும் குவிக்காமல் இருந்தாலும் இத்தனை வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றதற்குக் காரணம், தோனியின் பேட்டிங்கும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பும் தான். 

பவர்பிளேயில் வீழ்ந்த விக்கெட்டுகள்

சென்னை - 29
பெங்களூர் - 24
கொல்கத்தா - 20
தில்லி - 18
பஞ்சாப் - 17
ராஜஸ்தான் - 15
மும்பை - 13
ஹைதராபாத் - 9

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் சொதப்பியதுபோல இந்தமுறையும் சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ரசிகர்களை ஏமாற்றினார்கள். இந்தமுறையும் தோனி வந்துதான் அணியைக் காப்பாற்றி ஓரளவு ரன்கள் சேர்த்துக்கொடுத்தார். 

18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. 10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. 

மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறியதாவது:

20 ஓவர்களும் சீராக ரன்கள் எடுப்பதில்தான் தடுமாறுகிறோம். இதுதான் பிரச்னையாக உள்ளது. பவர்பிளேயில் ரன்கள் எடுப்பதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். 6 ஓவர்கள் முதல் 20 ஓவர்கள் வரை சரியாகவே ரன்கள் எடுக்கிறோம். இன்றைய ரன்ரேட் 7, பிறகு கடைசி ஆறு ஓவர்களில் 10 என இருந்தது. சரியாகவே விளையாடினாலும் பவர்பிளேயில் சொதப்புகிறோம். முதல் 6 ஓவர்களில் 40 ரன்களாவது எடுத்தால் நல்லது, அதன்மூலம் 150-160 ரன்கள் எடுக்கமுடியும். அடுத்த ஆட்டத்தில் இதைச் சரிசெய்ய முடிகிறாதா எனப் பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.