மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மும்பையும் - சென்னையும்! இறுதிப்போட்டியும் - முதல்பேட்டிங்கும்!

இந்த 4 இறுதி ஆட்டங்களின் போதும் ஒரு ஒற்றுமை மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அது, இறுதிப்போட்டியில்...

News image
Updated On :13 மே 2019, 10:46 am

Raghavendran

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரு அணிகளின் ரசிகர்களும் சற்றும் சளைக்காமல் தங்கள் அணிகளின் பெருமைகளை தொடர்ந்து பதிவிடுவதும், அதற்கு எதிர்தரப்பு பதிலடி அளிப்பதுமாக இருக்கும். 

இந்நிலையில், இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன. அதிலும் 4-ஆவது முறையாக யார் கோப்பையை வெல்வார் என்று பெரும் பரபரப்புக்கு இடையே 2019 இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

Story image

அதுமட்டுமல்லாமல், 4 முறை இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தாலும், 2010-ஆம் ஆண்டு மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. 2013, 2015, 2019 ஆகிய 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த 4 இறுதி ஆட்டங்களின் போதும் ஒரு ஒற்றுமை மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அது, இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெற்றதாகும். 

Story image

2010-ஆம் ஆண்டு டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

2013-ஆம் ஆண்டு டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

2015-ஆம் ஆண்டு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவவிட்டது.

2019-ஆம் ஆண்டு டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.