நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஐபிஎல் போட்டியை வெல்லும் அணிக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை: விவரங்கள்

ஐபிஎல் போட்டியை வெல்லும் அணிக்குப் பரிசுத்தொகையாக ரூ. 10 கோடி கிடைக்கவுள்ளது...

News image
Updated On :10 நவம்பர் 2020, 11:29 am

DIN

மும்பை - தில்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நிலையில், 5-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தில்லியை சந்திக்கிறது. அதேநேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி இந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்குகிறது.

மேலும், ரோஹித் சர்மா இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. ஐந்து இறுதிச்சுற்றுகளில் விளையாடி ஐந்திலும் ரோஹித்துக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். பிறகு மும்பைக்காக 2013, 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். 

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியை வெல்லும் அணிக்குப் பரிசுத்தொகையாக ரூ. 10 கோடி கிடைக்கவுள்ளது. தோல்வியடைந்து 2-ம் இடம் கிடைக்கும் அணிக்கு ரூ. 6.25 கோடி கிடைக்கும். பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்குத் தலா ரூ. 4.375 கோடி கிடைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.