ஐபிஎல்-இல் 3,000 ரன்கள்: மணீஷ் பாண்டே புதிய மைல்கல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
13-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மணீஷ் பாண்டே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்தார்.

இதில் 9-வது ரன்னை எடுத்த அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடக்கும் 16-வது வீரர் மணீஷ் பாண்டே.
ஐபிஎல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் 4 இடங்களில் முறையே விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...