மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் வெளிநாட்டு வீரர்: வார்னர் புதிய மைல்கல்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 4:54 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் 10-வது ரன்னை எடுத்த வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். அதேசமயம், 5,000 ஐபிஎல் ரன்களைக் கடக்கும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

மேலும் குறைந்த இன்னிங்ஸில் 5,000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் வார்னர் படைத்துள்ளார். அவர் இந்த மைல்கல்லை 135-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார்.

5,000 ஐபிஎல் ரன்களைக் கடந்த வீரர்கள்:

விராட் கோலி - 5,759

சுரேஷ் ரெய்னா - 5,368

ரோஹித் சர்மா - 5,149
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.