ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஐபிஎல்: சிஎஸ்கேவின் வெற்றியால் பிளேஆஃப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ள முதல் அணி மும்பை தான். 

News image
Updated On :30 அக்டோபர் 2020, 5:01 am

DIN

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

சிஎஸ்கேவின் அணியின் வெற்றியினால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ள முதல் அணி மும்பை தான். 

மும்பை இந்தியன்ஸ் அணி 9 வெற்றிகளைப் பெறுவதற்கு முன்பே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கேவுடன் கொல்கத்தா அணி தோல்வியடைந்துள்ளதால் அந்த அணியால் 16 புள்ளிகளைப் பெற முடியாது.

மும்பைக்குப் பின்னால் 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர் - தில்லி ஆகிய இரு அணிகளும் நவம்பர் 2 அன்று மோதுகின்றன. இதனால் இந்த இரு அணிகளில் ஓர் அணியால் மட்டுமே அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும்.

பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் மும்பைக்குப் பாதிப்பு நேராது. சிஎஸ்கேவுடன் கொல்கத்தா தோற்றுள்ளதால் அதிகபட்சமாக மூன்று அணிகளால் மட்டுமே 16 புள்ளிகள் பெற முடியும். இதனால் மும்பை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.