தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஐபிஎல் ஒத்திவைப்பு: ஊருக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய சொந்த நாட்டுக்கு எட்டு இங்கிலாந்து வீரர்கள் சென்று சேர்ந்துள்ளார்கள்.

News image

இங்கிலாந்து வீரர் பட்லர்

Updated On :5 மே 2021, 11:07 am

DIN

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய சொந்த நாட்டுக்கு எட்டு இங்கிலாந்து வீரர்கள் சென்று சேர்ந்துள்ளார்கள்.

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். மார்கன், ஜார்டன், மலான் ஆகிய மீதமுள்ள மூன்று வீரர்களும் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து புறப்படுவார்கள். இங்கிலாந்து சென்றுள்ள வீரர்கள் 10 நாள்களுக்கு அரசு அங்கீகரித்த தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கரோனா இல்லை என இரு பரிசோதனைகளில் உறுதியான பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.