ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தொடர்ந்து மோசமாக விளையாடும் சுரேஷ் ரெய்னா: பயிற்சியாளர் பிளெமிங் என்ன சொல்கிறார்?

எல்லோருமே சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள். ஒருவரைத் தவிர...

News image
Updated On :1 அக்டோபர் 2021, 12:42 pm IST

சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது. பேட்டிங், பந்துவீச்சு என யாருமே குறை வைக்கவில்லை. எல்லோருமே சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள். ஒருவரைத் தவிர.

சுரேஷ் ரெய்னா இந்த வருடம் மோசமாக விளையாடி வருவது சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 4-வது நிலை வீரராகக் களமிறங்கும் ரெய்னா ஓர் ஆட்டத்தில் மட்டுமே இந்த வருடம் நன்கு விளையாடினார். ஆரம்பத்தில் தில்லி அணிக்கு எதிராக 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் ரெய்னா. அதன்பிறகு அவருடைய பேட்டிங் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. 9 இன்னிங்ஸில் ஒருமுறை மட்டுமே 20 ரன்களைக் கடந்தார். இதனால் அடுத்த ஆட்டங்களில் ரெய்னாவை அணியிலிருந்து நீக்கி ராபின் உத்தப்பா அல்லது புஜாராவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் ரெய்னாவின் ஆட்டம் பற்றி சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியதாவது:

ரெய்னாவுக்கான பொறுப்பு என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துள்ளோம். அவருக்கான சரியான வேளையில் அவர் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். களத்தில் நுழைந்தவுடன் அதிரடியாக விளையாடும் வீரரை நாங்கள் பெற்றுள்ளோம். எனவே அவரை சுற்றி பேட்டர்களை அனுப்புகிறோம். ரெய்னாவின் அனுபவத்தை மதிக்கிறோம். நடு ஓவர்களில் அவர் விளையாடினால் எங்கள் அணிக்குப் பலமாக இருக்கும். அனுபவ வீரர் என்பதால் அவருக்குச் சில சுதந்திரம் உள்ளது. போட்டி இன்னும் தொடர்ந்து நடைபெறும்போது அவருடைய ஆட்டத்திறன் அதிகமாகும் என்று கூறியுள்ளார்.

பிளெமிங் கூறியபடி இனிவரும் ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியில் ரெய்னா தொடர்ந்து விளையாடுவார் என்று அறியப்படுகிறது. 

Related Article

சிஎஸ்கே பிளேஆஃப்புக்குத் தகுதி: சொன்னதை நிரூபித்த தோனி

விராட் கோலி மீது மூத்த வீரர்கள் புகார் தெரிவித்தார்களா?: பிசிசிஐ பதில்

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை அணி

நான் என்ன தவறு செய்தேன்?: குடும்பத்தினரிடம் விசாரித்த சஹால்

தரக்குறைவாகப் பேசுவதா?: மார்கன் - செளதி மீது அஸ்வின் சாடல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.