திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விராட் கோலி மீது மூத்த வீரர்கள் புகார் தெரிவித்தார்களா?: பிசிசிஐ பதில்

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மூத்த வீரர்கள் சிலர்...

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:43 pm IST

இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது எந்தவொரு வீரரும் புகார் அளிக்கவில்லை என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மூத்த வீரர்கள் சிலர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகார் அளித்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதனை மறுத்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஊடகங்கள் இதுபோன்ற அபத்தங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் பிசிசிஐயிடம் புகார் அளிக்கவில்லை. ஒவ்வொருமுறையும் வெளியாகும் தவறான செய்திகளுக்கு பிசிசிஐ விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது என்றார். 

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது. 5-வது டெஸ்ட் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியில் கரோனா பரவல் ஏற்பட்ட சூழலில், தொடர்ந்து விளையாட இந்திய வீரர்கள் மறுத்தார்கள். இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலுடன் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. அந்த டெஸ்ட் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.