திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நான் என்ன தவறு செய்தேன்?: குடும்பத்தினரிடம் விசாரித்த சஹால்

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாறிய பிறகு நிலைமை மாறிவிட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:05 pm IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் சஹால். இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது அவருடைய நிலைமை வேறாக இருந்தது.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் 7 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் சஹால். எகானமியும் அதிகம். 8.26. இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஹாலுக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாறிய பிறகு நிலைமை மாறிவிட்டது. 4 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் சஹார். எகானமி - 5.57 மட்டுமே. பெங்களூர் அணியின் சமீபத்திய வெற்றிகளில் அதிகமாகப் பங்களிக்கிறார்.

இந்த மாற்றம் குறித்து சஹால் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் 3-4 ஆட்டங்களில் நான் சரியாக விளையாடவில்லை. பிறகு வீரர்களிடமும் குடும்பத்தினரிடமும் நான் என்ன தவறு செய்தேன் எனக் கேட்டு விசாரித்தேன். இலங்கையில் விளையாடியபோது என் தன்னம்பிக்கையை மீண்டும் அடைந்தேன். அந்த தன்னம்பிக்கையை இங்கு மீண்டும் பயன்படுத்துகிறேன். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குறைவான வேகத்தில் பந்துவீசினேன். அதன்மூலம் பேட்டர்கள் கவர் பகுதியில் ஷாட் அடிக்க முயல்வார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.