மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இதையும் படிக்க | வருண் சக்ரவர்த்தி தரமான பந்துவீச்சாளர்: பாராட்டும் நியூசி. பிரபலம்
மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறார். இதனால், கடந்த ஆட்டத்தில் விளையாடிய அன்மோல்சிங் அணியில் சேர்க்கப்படவில்லை.