வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சொதப்பும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்: பிரையன் லாரா சாடல்

ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான...

News image

சூர்யகுமார் யாதவ்

Updated On :29 செப்டம்பர் 2021, 10:26 am

ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரையும் விமர்சனம் செய்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரும் ஐபிஎல் 2021 போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் 0, 8, 5, 3 ரன்கள் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். 11, 14, 9 என ரன்கள் எடுத்த இஷான் கிஷனை நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நீக்கியது மும்பை. இதையடுத்து இவ்விருவரையும் விமர்சனம் செய்து முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது:

இருவரும் மோசமாக விளையாடுவதற்கு இந்திய அணிக்குத் தேர்வானதும் ஒரு காரணமாக இருக்கலாம். பல வீரர்களும் தங்களுடைய பழைய பெருமையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்திய அணியோ அல்லது வேறு எதுவோ அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் இதுதானே உங்களுக்கு வாழ்வாதாரம்? ஐபிஎல் போட்டியில் தான் உங்களை நிரூபித்தீர்கள். சூர்யகுமாரையும் இஷான் கிஷனையும் செளரப் திவாரியையும் பார்க்கும்போது செளரப் திவாரி தான் இருவரை விடவும் ரன்கள் எடுப்பதில் ஆர்வமாக உள்ளார். இருவரும் இன்னும் கொஞ்சம் தொழில்முறை வீரர்களாக நடந்துகொண்டு மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவ வேண்டும் என்றார். 

Related Article

அஸ்வினுடன் செளதி, மார்கன் வாக்குவாதம் செய்தது ஏன்?: பின்னணியை விவரிக்கும் 'சமாதானத் தூதர்' தினேஷ் கார்த்திக்

ஒரே நேரத்தில் நடைபெறும் இரு ஐபிஎல் ஆட்டங்கள்: காரணம் என்ன?

எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, நடந்தது என்ன?: இன்ஸமாம் உல் ஹக் விளக்கம்

வெற்றிப் பாதைக்குத் திரும்பிய மும்பை: களைகட்டும் புள்ளிகள் பட்டியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.