நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லரை விடவும் ஆவேஷ் கான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 2:22 pm IST

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது.

9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கினார் ஆவேஷ் கான். ஒரு பந்து கூட விளையாடாமல் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

2023இல் லக்னௌ அணியில் இது மாதிரி ஒரு முறை கடைசி பந்தில் ரன் அடிக்காமல் பைஸில் வெற்றி பெற்றார். அதன் வெற்றியை ஆக்ரோஷமான விதத்தில் ஹெல்மெட்டை கீழேப்போட்டு கொண்டாடினார். இது அப்போதே வைரலானது. தற்போது இரண்டாவது முறையாக ஒரு ரன்னும் அடிக்காமல் வெற்றிக்கு உதவியுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் அணியினர் ஆவேஷ் கானை ஃபினிஷர் என பாராட்டி விடியோ வெளியிட்டுள்ளார்கள். லக்னௌ அணியும் பாராட்டி ஜாலியாக பதிவிட்டுள்ளது. இணையத்தில் ரசிகர்களும் ஆவேஷ் கானை புகழ்ந்து வருகிறார்கள்.

ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லரை விடவும் ஆவேஷ் கான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.