நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இது எனது 10-ஆவது ஐபிஎல் தொடர்: ஹார்திக் கூறியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

News image

படங்கள்: ஹார்திக் பாண்டியா/ இன்ஸ்டா

Updated On :22 மார்ச் 2024, 6:59 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மா. 2013 முதல் 2023 வரை மும்பை அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். கடைசி 2 சீசன்களாக சரியாக செயல்படாத காரணத்தினால் அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது. பின்னர் பாண்டியாவை கேப்டனாக மாற்றியது.

இது குறித்து ஹார்திக் பேசிய விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஹார்திக் கூறியதாவது:

இது எனது 10ஆவது ஐபிஎல் தொடர். எனது வளர்ச்சி, பயணம் என எல்லாமே என்னுடைய வழியில் நடந்தமைக்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன். மீண்டும் மும்பை அணியுடன் சேர்வது என்பது எப்போதும் எனது இதயத்தில் இருப்பதுதான்.

ஐபிஎல்தான் எனக்கு அடையாளத்தைத் தந்தது. ஐபிஎல்தான் எனக்கு அனைத்தையுமே தந்தது. அது இல்லை என்றால் நான் இன்னும் பரோடாவில்தான் இருந்திருப்பேன். ஆனால் இதே ஹார்திக்காக இருந்திருக்க மாட்டேன்; வேறொரு ஹார்த்திகாக இருந்திருப்பேன் என சிரித்துக்கொண்டே பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.