தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | தில்லி கேப்பிடல்ஸ் (எக்ஸ்)

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பந்த் விளையாடும் 100-வது போட்டியாகும்.

ரிஷப் பந்த்
பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

இதற்கு முன்பாக தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அமித் மிஸ்ரா 99 போட்டிகள் விளையாடியதே அதிகபட்சமாக இருந்தது.

ஒரு அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - சுரேஷ் ரெய்னா

மும்பை இந்தியன்ஸ் - ஹர்பஜன் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கௌதம் கம்பீர்

ராஜஸ்தான் ராயல்ஸ் - அஜிங்க்யா ரஹானே

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - புவனேஸ்வர் குமார்

தில்லி கேப்பிடல்ஸ் - ரிஷப் பந்த்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை எந்த ஒரு வீரரும் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com