மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

கொல்கத்தா அணி 12 வருடங்களுக்குப் பிறகு வான்கடேவில் மும்பையிடம் வெற்றிப் பெற்றுள்ளது.

News image
Updated On :4 மே 2024, 12:09 pm IST

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் 19.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களே சோ்த்த கொல்கத்தா, பின்னா் மும்பையை 18.5 ஓவா்களில் 145 ரன்களுக்கு சுருட்டியது. 2012-க்குப் பிறகு மும்பை மண்ணில் இதுவே கொல்கத்தாவின் முதல் வெற்றியாகும்.

கேகேஆர் அணியின் உரிமையாளர் பிரபல நடிகர் ஷாருக்கான். அவரது மகள் சுஹானா கான் இந்த வெற்றிக் குறித்து இன்ஸ்டாகிராமில், “இறுதியாக வென்றுவிட்டோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஜோயா அக்தர் இயக்கத்தில் ஆர்ச்சிஸ் எனும் இணையத் தொடரில் சுஹானா கானின் நடிப்பு பாராட்டப்பட்டது.

Story image

கேகேஆர் அணி வீரர் நிதீஷ் ராணா, “12 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் வரலாற்று வெற்றி இது. அபாரமான வெற்றி. அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.