தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!
படம் | ஐபிஎல்
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்கிறது.

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!
டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துருவ் ஜுரெல் மற்றும் ஹெட்மேயர் அணியில் இல்லை. ஷுபம் துபே மற்றும் டோனோவன் பெரேரைரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தில்லி அணியில் இஷாந்த் சர்மா மற்றும் குல்பதீன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், இன்றையப் போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் (குல்பதீன் மற்றும் டோனோவன் பெரேரைரா) அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com