நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கலந்துகொண்டார்.
அந்தச் சந்திப்பின்போது, வாய்ஸ் - ரெக்கார்ட் செய்ய வைக்கப்பட்ட செய்தியாளர் ஒருவரின் மொபைல் போனில் இருந்து அம்மா என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
”யாருடைய அம்மா?” என சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் அனுமதிக் கேட்டுக்கொண்டு அந்த அழைப்பினை எடுத்தார் ஜஸ்டின் லாங்கர்.
அழைப்பை எடுத்த ஜஸ்டின் லாங்கர், “அம்மா, இது நள்ளிரவு 12.08. நான் செய்தியாளர் சந்திப்பில் இருக்கிறேன்” எனக் கூறி வைத்துவிட்டார்.
இது அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. பலரும் அம்மா என்றால் இப்படித்தான் என நெகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் லாங்கர் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்டர். இவரது பயிற்சியில் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 2023இல் இருந்து லக்னௌ அணியில் பயிற்சியாளராக இருக்கிறார்.
A phone call in the middle of the press conference ð
— IndianPremierLeague (@IPL) April 4, 2025
Good news on Mayank Yadav's recovery ð°
And the importance of National Cricket Academy (COE) ð
ð¥ #LSG Head Coach, Justin Langer, has a field day at the post-match press conference ð#TATAIPL | #LSGvMI pic.twitter.com/MBoA8oWhUG
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் 2-ஆவது நாளாக சாா்பதிவாளா் ஆஜா்

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஜடி அலுவலகத்தில் சாா் பதிவாளா் ஆஜா்
தங்க வளையல் திருடிய பெண் கைது

முன்னெழும் புதிய கேள்வி!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



