ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் 377 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன், விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் அவர் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்களில் நிக்கோலஸ் பூரன் ஒருவரின் ஸ்டிரைக் ரேட் மட்டுமே 200-க்கும் அதிகமாக உள்ளது. மற்ற வீரர்களின் ஸ்டிரைக் ரேட் 200-க்கும் குறைவாகவே உள்ளது.
ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்
கரீபியன் தீவுகளில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இந்தியாவிலும் ஆடுகளங்கள் இருப்பதே தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இங்குள்ள ஆடுகளங்கள் எனது சொந்த மண்ணில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இருக்கின்றன. கரீபியன் தீவுகளின் ஆடுகளங்களில் அதிக அளவிலான பௌன்சர்கள் இருக்காது. இங்குள்ள ஆடுகளங்கள் உண்மையில் பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளங்கள். இந்தியாவில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஊக்கமளிக்கிறார்கள்.
பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர் விளாசுவதற்காக வேகமாக பேட்டினை சுழற்ற தனியாக எந்த ஒரு பயிற்சியும் நான் மேற்கொள்வதில்லை. வேகமாக பேட்டினை சுழற்றுவது எனக்கு இயல்பாகவே வருகிறது. பேட்டினை வேகமாக சுழற்றுவதன் பின்னணியில் எந்த ஒரு ரகசியமும் இல்லை. பேட்டினை எப்படி வேகமாக சுழற்றுகிறீர்கள் என்ற கேள்வி என்னிடம் மில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளது. பேட்டினை வேகமாக சுழற்ற ஒருபோதும் தனியாக எந்த ஒரு பயிற்சியையும் நான் மேற்கொண்டதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!
சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்!
ஜேடன் லெனாக்ஸ் பந்து வீச்சில் வீழ்ந்த மே.இ.தீவுகள்! தொடரில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து!

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



