பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

14 மாதங்களில் 5 கோப்பைகளை வென்ற ரொமாரியோ ஷெப்பர்ட்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் வென்ற கோப்பைகள் குறித்து...

Romario shepherd

ரொமாரியோ ஷெப்பர்ட் - படம்: எக்ஸ் / ஆர்சிபி

Published On :

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் (31 வயது) கடந்த 14 மாதங்களில் ஐந்து கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

கயானா நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான ரொமாரியோ ஷெப்பர்ட் பல நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

இந்தியாவின் ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) தொடரில் ஆர்சிபி அணியில் ரொமாரியோ ஷெப்பர்ட் விளையாடுகிறார். அவர் கடந்த 2025, 2026 சீசனில் கோப்பை வென்றபோது அந்த அணியில் இருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஜிசிஎல் (குளோபல் சூப்பர் லீக்) 2025, 2026 சீசனிலும் கோப்பை வென்ற கயானான அமேசான் வாரியர்ஸ் அணியில் ரொமாரியோ ஷெப்பர்ட் விளையாடியுள்ளார்.

கடைசி சீசனில் வெறுமனே 85 ரன்கள் அடித்தும், அதைக் கட்டுப்படுத்தி த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடரில் 2025 சீசனில் கோப்பை வென்ற எம்ஐ நியூயார்க் அணியில் இருந்தார்.

Summary

Five Trophies for Romario shepherd in last 14 months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.