ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்களை குறிவைத்து தோனி ஆடவுள்ளதாகவும், அவரின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் உள்ளதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு (18வது) ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 23) மோதவுள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனிடயே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தோனி குறித்து ருதுராஜ் பேசியதாவது,
''தோனி சென்னை அணியின் இம்பாக்ட் வீரர் தான். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அத்தனை வீரர்களும் உத்வேகம் பெறுகிறோம். அவர் பந்துகளை அடிக்கும் அளவுக்கு, எங்களால் கூட அடிக்க முடியவில்லை. 43 வயதில் அணிக்காக அவர் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியவை.
எவ்வளவு அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கலாம் என்பதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். அவரின் உடல்நிலை முன்பைவிட குறைந்ததாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை'' எனக் குறிப்பிட்டார்.
தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
''அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த ஆண்டின் பந்துவீச்சுத் தாக்குதல் எதிரணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அணிக்கு சிறந்தது எது?, எந்த இணை சிறப்பாக இருக்கும் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல.
தொடக்க வீரர்களின் இணை முந்தைய ஆட்டங்களை போன்று இருக்கும். எங்கள் அணியில் அனைவரும் முதல் மூன்று இடங்களில் ஆடக்கூடியவர்கள்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?: இன்று மோதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பிளெமிங்தான் காரணம்: ஜோ ரூட்

நெதர்லாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகல்!

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக அல்பி மோர்க்கல் நியமனம்!

விவிஎஸ் லக்ஷ்மனுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்! காரணம் என்ன?
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



