சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

டி காக் அதிரடி ஆட்டம்: கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :26 மார்ச் 2025, 11:35 pm IST

ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதியது. இதில் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 29, சஞ்சு சாம்சன் 25 ரன்கள் எடுத்தார்கள். 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கடைசியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

கேகேஆர் அணியில் வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, ஹர்சித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஸ்பென்சார் ஜான்சன் 1 விக்கெட் எடுத்து 42 ரன்களை கொடுத்திருந்தார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான குவின்டான் டி காக் 61 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகுவன்ஷியும் 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.