மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

News image

சஞ்சு சாம்சன் - படம் | ஐபிஎல்

Updated On :27 மார்ச் 2025, 4:04 pm IST

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவியது.

ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பயன்படுத்திய யுக்தியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போட்டிகளின்போது பயன்படுத்த வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பயன்படுத்திய யுக்தியை போட்டிகளின்போதும் செயல்படுத்த வேண்டும். போட்டிகளின்போது என்ன தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் ஆராய வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசை சற்று பலவீனமாக உள்ளது.

அவர்களின் பந்துவீச்சு வரிசை சந்தீப் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே அதிகப்படியாக நம்பியிருக்கிறது. ஜோஃப்ரா ஆர்ச்சர் பல்வேறு காயங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். காயங்களால் பாதிக்கப்படுவது அவரது தன்னம்பிக்கையை குறைக்கும்.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் கடினமாக இருந்ததால், நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்த அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அவர் அதனை செய்யவில்லை என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பராக் பேட்டிங்குக்கு வலிமை சேர்த்தாலும், பந்துவீச்சில் அந்த அணி பலவீனமாகவே உள்ளது.

ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.