தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

News image

சஞ்சு சாம்சன்

படம் | ஐபிஎல்

Updated On :27 மார்ச் 2025, 10:34 am

DIN

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவியது.

ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பயன்படுத்திய யுக்தியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போட்டிகளின்போது பயன்படுத்த வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பயன்படுத்திய யுக்தியை போட்டிகளின்போதும் செயல்படுத்த வேண்டும். போட்டிகளின்போது என்ன தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் ஆராய வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசை சற்று பலவீனமாக உள்ளது.

அவர்களின் பந்துவீச்சு வரிசை சந்தீப் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே அதிகப்படியாக நம்பியிருக்கிறது. ஜோஃப்ரா ஆர்ச்சர் பல்வேறு காயங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். காயங்களால் பாதிக்கப்படுவது அவரது தன்னம்பிக்கையை குறைக்கும்.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் கடினமாக இருந்ததால், நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்த அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அவர் அதனை செய்யவில்லை என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பராக் பேட்டிங்குக்கு வலிமை சேர்த்தாலும், பந்துவீச்சில் அந்த அணி பலவீனமாகவே உள்ளது.

ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.