

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சிஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்கிறது.
இதையும் படிக்க: சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்: ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
சிஎஸ்கேவில் நாதன் எல்லிஸுக்குப் பதில் பிளேயிங் லெவனில் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபியில் புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.