11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

அதிரடியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸில் வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

News image

சிஎஸ்கே வீரர்கள் - படம் | ஐபிஎல்

Updated On :29 மார்ச் 2025, 6:11 pm IST

அதிரடியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸில் வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

17 ஆண்டுகளாக சிஎஸ்கேவின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதிலும், வெற்றி பெற அதிக ரன்கள் தேவைப்பட்டபோது தோனியை களமிறக்காமல் அஸ்வினை களமிறக்கியது மிகப் பெரிய பேசுபொருளானது.

ஸ்டீஃபன் பிளெமிங் கூறியதென்ன?

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு சிஎஸ்கேவின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிரடியாக விளையாட தங்களிடமும் வீரர்கள் இருப்பதாகக் கூறி விமர்சனங்களுக்கு சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டீஃபன் பிளெமிங்

ஸ்டீஃபன் பிளெமிங் - படம் | ஐபிஎல்

சிஎஸ்கே விளையாடும் விதம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்டீஃபன் பிளெமிங் பதிலளித்ததாவது: முதல் போட்டியில் வெற்றி பெற்றது நன்றாக விளையாடியதற்கு அடையாளம். எங்களிடமும் அதிரடியாக விளையாடுவதற்கு வீரர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கேவின் பேட்டிங் தொடர்பான கேள்விகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் சிஎஸ்கேவை குறைத்து மதிப்பிட்டு தப்பு கணக்கு போட வேண்டாம். எங்களது வீரர்கள் நன்றாகவே விளையாடி வருகிறார்கள் என்றார்.

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், நாளை (மார்ச் 30) குவாஹாட்டியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.