நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியதாவது...

News image

கே.எல்.ராகுல், ஹேமங் பதானி. - படங்கள்: எக்ஸ்/ தில்லி கேபிடல்ஸ், ஹேமங் பதானி.

Updated On :20 மே 2025, 6:40 pm IST

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார்.

ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் தில்லி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் சேர்க்க குஜராத் அணி 19 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சதம் (112* ரன்கள் 65 பந்துகளில்) அடித்து அசத்தினார்.

தில்லி கேபிடல்ஸ் அணி தோற்றாலும் கே.எல்.ராகுலின் பேட்டிங்கை பலரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி அணியின் மீட்டிங்கில் அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது:

நமது அணியில் ஒருவர் ஒரு போட்டியில் நம்.4இல் இடத்திலும் மற்றொரு அணியில் நம்.3 இடத்திலும் விளையாடுகிறார். முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

கே.எல்.ராகுல் ஒரு தரத்தினை அமைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். அதேபோல் அணியில் உள்ள ஒவ்வொருவரும் இந்தத் தரத்தில் விளையாட வேண்டும் என்றார்.

பின்னர் பயிற்சியாளர் கெவின் பீட்டர்சன் கே.எல்.ராகுலுக்கு பரிசை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.