பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இருக்கும் சிஎஸ்கே வீரர் குறித்து...

News image

நூர் அகமது - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :21 மே 2025, 11:48 am IST

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார்.

20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாடி வருகிறார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ச்சியாக நன்றாக பந்துவீசிவருவதில் நூர் அகமதும் ஒருவர். நேற்றிரவு ராஜஸ்தான் உடனான போட்டியில் ரியான் பராக்கை நூர் அகமது தனது சிறப்பான பந்தினால் போல்ட் ஆக்கினார்.

இந்த விக்கெட்டுடன் இந்த சீசனில் தனது 21-ஆவது விக்கெட்டினை நிறைவு செய்தார்.

ஏற்கனவே, 20 விக்கெட்டுகள் எடுத்தபோதும் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025-இல் அதிக விக்கெட்டுகள்

1. பிரசித் கிருஷ்ணா - 21 விக்கெட்டுகள் (குஜராத்)

2. நூர் அகமது - 21 விக்கெட்டுகள் (சிஎஸ்கே)

3. ஜாஷ் ஜேசில்வுட் - 18 விக்கெட்டுகள் (ஆர்சிபி)

4. டிரெண்ட் போல்ட் - 18 விக்கெட்டுகள் (மும்பை)

5. வருண் சக்கரவர்த்தி - 17 விக்கெட்டுகள் (கொல்கத்தா)

பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது இருவரும் 21 விக்கெட்டுகள் எடுத்தாலும் எகானமியில் குறைவாக இருப்பதால் பிரசித் கிருஷ்ணா முதலிடத்தில் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.