அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான முக்கியமானதொரு ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் படுதோல்விடைந்து இந்தத் தொடரிலிருந்து வெளியேறியது.
அகமதாபாத் நகரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 229 ரன்களை அதிரடியாகக் குவித்தது. குஜராத் அணியில் முதல் விக்கெட்டுக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷண் இணை 125 ரன்களைக் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது. அந்த அணியில் சாய் சுதர்ஷண் (84 | ஸ்ட்ரைக்-ரேட்: 158), ஷுப்மன் கில் (64 | ஸ்ட்ரைக்-ரேட்: 172), ஜாஸ் பட்லர் (57 | ஸ்ட்ரைக்-ரேட்: 211) அதிரயில் சென்னை அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இதையடுத்து, 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 20 ஓவர்களில் எட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்கி போராடினர். ஆயினும், தனி ஒருவனாகப் போராடிய ஷிவம் துபே தலா 4 சிக்ஸர்கள், பௌண்டரிகளுடன் 17 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாரும் நிலைத்து நின்று விளையாடாததால், சிஎஸ்கே 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மொத்தமுள்ள 14 ஆட்டங்களில் 6-இல் வெற்றி, 8-இல் தோல்வியடைந்து 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஆட்டங்களில் 9-இல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணிக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் உள்ளது.
Summary
Chennai Super Kings, 66th Match - Gujarat Titans won by 89 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







