பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா (விடியோ)

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2021, 6:21 am

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 86.65 மீ. தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றார். 

எனினும் மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால் சிங், 80 மீ. தூரத்தை எட்டாததால் அவர் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். அவர் அதிகபட்சமாக 76.40 மீ. தூரம் வீசினார். 

23 வயது நீரஜ் சோப்ராவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி. தகுதிச்சுற்றில் அதிகத் தூரம் வீசியவரும் அவர் தான். 2017 உலக சாம்பியன் ஜோஹன்னஸ் வெட்டரை விடவும் அதிகத் தூரம் வீசியுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற தகுதிச்சுற்றில் 83.50 மீ. தூரம் வீசவேண்டும், அல்லது அதிகத் தூரம் வீசிய முதல் 12 பேரில் ஒருவராக இருக்கவேண்டும். 

இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.