ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

துப்பாக்கி சுடும் போட்டி - ஏமாற்றம் தந்த இளவேனில் வாலறிவன்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இன்று நடந்த தகுதிச்  சுற்று போட்டியில்,  இந்தியாவின் இளவேனில் வாலறிவன்  இறுதி போட்டிக்குச்  செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.  

News image
துப்பாக்கி சுடும் போட்டி - ஏமாற்றம் தந்த இளவேனில் வாலறிவன்
Updated On :24 ஜூலை 2021, 11:52 am

DIN

டோக்கியோ : ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இன்று நடந்த தகுதிச்  சுற்று போட்டியில்,  இந்தியாவின் இளவேனில் வாலறிவன்  இறுதி போட்டிக்குச்  செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார் .  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சவுரப் சவுத்ரி இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில் , பெண்கள் 10 மீ.  'ஏர் பிஸ்டல்' பிரிவில் சிறந்த வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த  இளவேனில், மூன்று முறை உலக கோப்பை தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா ஆகியோர் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில்  இன்று  பங்கேற்றனர்.  

இந்தியாவுக்கு  பதக்கம் பெற்றுத்  தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவேனில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16வது இடம் பிடித்தார். 621.9 புள்ளிகள் எடுத்த அபுர்விக்கு 36வது இடம் கிடைத்தது. முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு  செல்வார்கள்  என்பதால், இருவரும் பதக்கக்  கனவை தவற விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.