ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்குப் பரிசுத் தொகை: இந்திய ஒலிம்பிக் சங்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றால் அவர்களது பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :24 ஜூலை 2021, 11:27 am

DIN


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றால் அவர்களது பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.

தங்கம் வென்றால் சம்பந்தப்பட்ட பயிற்சியாளருக்கு ரூ. 12.5 லட்சம், வெள்ளி வென்றால் ரூ. 10 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ. 7.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இதுபற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலர் ராஜீவ் மேத்தா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"வீரர், வீராங்கனைகளுடன் டோக்கியோவில் பயிற்சியளித்த பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு இது பெரிதளவில் ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். மீராபாய் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்."

டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் 49 கிலோ எடைப் பிரிவில் சனிக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.