கனவு நனவானதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு சனிக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
வெற்றி குறித்து மீராபாய் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"உண்மையில் கனவு நனவான தருணம். இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் பயணத்தின்போது உடனிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நிறைய தியாகங்களைச் செய்து என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு குடும்பத்தினருக்கு, குறிப்பாக என் அம்மாவுக்கு நன்றி.
மேலும் எனக்கு ஆதரவாக இருந்த அரசுக்கு நன்றி. விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு, ரயில்வே, விளம்பரதாரர்கள் உள்ளிட்டோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் நன்றி.
தொடர்ச்சியான கடின உழைப்பு, ஊக்குவிப்பு மற்றும் பயிற்சிக்காக எனது பயிற்சியாளர் விஜய் சர்மா மற்றும் உதவி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது சிறப்பு நன்றிகள்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு

சேலத்தில் 25.23 லட்சம் வாக்குகளை 253 சுற்றுகளில் எண்ண நடவடிக்கை!

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


