ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: 2-வது சுற்றில் மாஸ் காட்டிய மணிகா பத்ரா

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜூலை 2021, 8:16 am

DIN


டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது சுற்றில் உக்ரைன் நாட்டின் மர்காரிடா பெசோட்ஸ்காவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார் மணிகா பத்ரா. முதலிரண்டு கேம்களை 4-11, 4-11 என்ற கணக்கில் இழந்து மணிகா பத்ரா பின்னடைவைச் சந்தித்தார்.

ஆனால், அடுத்த இரண்டு கேம்களில் எழுச்சி கண்ட மணிகா 11-7, 12-10 என்ற கணக்கில் வென்று மிரட்டினார். எனினும், 5-வது கேமை மீண்டும் உக்ரைன் வீராங்கனை 11-8 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிகா 6-வது மற்றும் 7-வது கேமை முறைய 11-5, 11-7 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.

இதன்மூலம், 4-11, 4-11,11-7, 12-10, 8-11, 11-5, 11-7 என்ற கேம் கணக்கில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.