டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்றில் உக்ரைன் நாட்டின் மர்காரிடா பெசோட்ஸ்காவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார் மணிகா பத்ரா. முதலிரண்டு கேம்களை 4-11, 4-11 என்ற கணக்கில் இழந்து மணிகா பத்ரா பின்னடைவைச் சந்தித்தார்.
ஆனால், அடுத்த இரண்டு கேம்களில் எழுச்சி கண்ட மணிகா 11-7, 12-10 என்ற கணக்கில் வென்று மிரட்டினார். எனினும், 5-வது கேமை மீண்டும் உக்ரைன் வீராங்கனை 11-8 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிகா 6-வது மற்றும் 7-வது கேமை முறைய 11-5, 11-7 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.
இதன்மூலம், 4-11, 4-11,11-7, 12-10, 8-11, 11-5, 11-7 என்ற கேம் கணக்கில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.