டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை ஹெவிவெயிட் பிரிவில் (+ 91 கிலோ) இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற போட்டியில் ஜமைக்காவின் ரிகார்டோ பிரெளனை 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலோலோவை எதிர்கொள்கிறார் சதீஷ் குமார்.
பகோடிர், நடப்பு உலக சாம்பியன் என்பதால் அரையிறுதிக்கு சதீஷ் குமார் தகுதி பெறுவது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.